June 23, 2007

நாலடியார்

1. அறத்துப்பால்

1.2 இளமை நிலையாமை

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை :

என்னை ஈன்றெடுத்த என் தாய், என்னைத்தவிக்க விட்டுவிட்டு அவளைத்தவிக்கவிட்டுச் சென்ற தன் தாயைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். என் தாயின் தாயாரின் நிலையும் அதுவேதான். இப்படி ஒவ்வொரு தாயும் தன் தாயைத் தேடிக்கொண்டு போவதுதான் உலகநியதி


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை :

She who was my mother, having borne me in this world, had departed seeking a mother for herself, if this be the case also with her mother, one mother seeking after another mother, then is this world wretched indeed.


- By Rev.F.J.Leeper, Tranquebar

No comments: