June 22, 2007

'காதலும் நட்பும் ஒன்றுதான்'

ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும்

நட்பு வளர வளர அது ஆணாக இருக்கும் பட்சத்தில் அது தலைமுறையும் தாண்டிய ஒரு உறவாக மாறுகிறது. அதுவே ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது காதலாக மாறி கல்யாணத்தில் போய் நிற்கிறது. அதுவும் தலைமுறைக்குத் தொடர்கிறது.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன், நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒரேயொரு வித்யாசம்
  • நட்பால் ஆத்மார்த்தமான அன்பைமட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

    அதனைத்தேடி யாரும் செல்வதில்லை, தானாக வரக்கூடியது, அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடியது.
  • ஆனால் காதலால் உடலையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

அதானால்தான் உடலால் கிடைக்கக்கூடிய இன்னொன்றையும் தேடி காதல் என்ற ஒன்றுக்காக தலைமுறை தலைமுறையாக நாம் அலைகிறோம். இது தவறோ குற்றமோ இல்லை. இது மனித நியதி, ஏன் உயிருள்ள ஜீவராசி ஒவ்வொன்றுக்கும் உரியது. ஆத்மா நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.

அப்படி நம்மால் கட்டுப்படுத்தமுடியுமெனில் அங்கே காதலுக்கு இடமில்லை, அது இறைவனுடைய திருவடி நோக்கிப் பிரயாணிக்கும் ஆன்மீகவழி

- இது ஒரு நண்பரின் கேள்விக்கான என்னுடைய பதில்

1 comment:

சூரகுடி பாலா said...

exellent, this is a very very metured answer. Nobody can tell like this answer.

Vethangalai katra oruvanal than intha answer chollamudiyum. I proud of you.

Evan oruvanal inpathaiyum thunpathaium ore mathiriyaga unara mudikiratho appadipattavanalthan intha pathilai chollamudiyum.