July 10, 2007

பெரியார்

விருதுநகரில் தேர்தல் சமயம். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்) பேசுவார் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. காமராசரின் மீது மதிப்பு, மரியாதை கொண்ட தந்தை பெரியாரிடம் ஒருவர் சென்று, "அய்யா! பெருந்தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்" என்று சுவரொட்டியைக் காட்டி கோபப்பட,
பெரியார் அந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டு சொன்னாராம்.
“சரியாத்தான் போட்டிருக்கானுங்க, ஆனா இதுல ஒரு வார்த்தை சேர்த்துக்கிட்டா நல்லாருக்கும்” என்று சொல்லிச் சொன்னாராம்,
“படிக்காத காமராசர்" உருவாக்கிய பள்ளிக்கூடத்தில், 'படித்த காமராசர்' பேசுவார் என்று போட்டிருக்கணும்" என்றாராம்.

No comments: