July 21, 2007

நாலடியார்

1. அறத்துப்பால்

1.8. சினம் இன்மை

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - ஈர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு

- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை

வெறி பிடித்த நாய் தன்னைக் கடித்துவிட்டால், அதைத் திருப்பிக் கடிப்பார் யாருமில்லை. அது போல சீரிய குணம் இல்லாதவர்கள், தீய வார்தைகளைத் தன்மீது உபயோகித்தால், கற்று உணர்ந்த பெரியவர்கள் அதே வார்தைகளைத் தம் வயால் அவர் மீது சொல்லமாட்டார்கள்


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Placidity
There is none here who, though they see a dog snap angrily at them, will in return snap at the dog again with their mouth. When base born persons mischievously utter base things, will the noble repeat such words with their mouths in return?

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

No comments: