July 22, 2007

"யாழ் சுதாகர்"

"யாழ் சுதாகர்" பெயரில் மட்டுமல்ல இனிமை, கோபுரக் கலசங்களாக இருப்பினும் கீழுள்ள குடிசைகளைத் தன்னோடு கை சேர்த்து மேலிழுக்க முயற்சிக்கும் மனித நேயம், தமிழனுக்கேயுரிய தனித்துவம், எளிமை, கருணை இவையனைத்துக்கும் சொந்தக்காரர்தான் அந்த "யாழ் குரலோன்". இந்த மூக்கொழுகும் மூன்று வயதொத்த மழலையின் மண்கோபுர விளையாட்டான, எனது வலைத்தளைத்தைப் பற்றி, அவர் வாயால் வாழ்த்திய வார்த்தைக்காவியம் இது.

"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையத் தளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துனையிருப்பானாக"


என்னே யான் பேறு! பிறவிப்பலனை அடைந்துவிட்டேன்! நன்றி! அந்த மாமனிதனுக்கும்! பிறகு கடவுளுக்கும்!! அவரின் வலைத்தளத்தை நீங்களும் பிரயாணித்துப் பிரமிப்படையுங்கள். இது என் பாக்கியம்!!
http://www.blogger.com/profile/14507708154159068336

No comments: