July 07, 2007

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால், செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்



- பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்! -

அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்தமிழ்

நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்தமிழ்

எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்தமிழ்

எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்தமிழ்

எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தவறாமல் இந்தப் பாடலைக்கேட்கவும், இணைப்பில் செல்க.http://www.tamilnation.org/asx/thamizh.asx

No comments: