September 11, 2007

செப்டம்பர் 11 தாக்குதலின் ஆறாவது ஆண்டு நினைவு தினம்

  • அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகன் மற்றும் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் ஆகியவை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஆறாம் ஆண்டு நிகழ்வுகள் இன்று நியூயார்க் மற்றும் வாஷிங்கடனில் இடம்பெற்றுள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 3000 பேர் பலியாயினர். அந்த தாக்குதலின் போது நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில் உயிர்தப்பிய தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசரகால பணியாளர்கள், தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் பெயர்களையும் வாசித்தனர்
  • இராணுவத் தளபதியிடம் கடுமையான கேள்விகள் : இராக்கில் உள்ள , அமெரிக்காவின் உயர் இராணுவத் தளபதி, அவரது இராணுவ யுக்தி குறித்து, வாஷிங்டனில், முன்னோடி ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் செனட் உறுப்பினர்களிடமிருந்து மேலும் அதிகக் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார்
  • இஸ்ரேலிய இராணுவ முகாம் மீது ராக்கெட் தாக்குதல் : இஸ்ரேலிய இராணுவ முகாம் ஒன்றின் மீது பாலத்தீன ஆயுததாரிகள் நடத்திய ஒரு ராக்கெட் தாக்குதலில் கிட்டத்தட்ட எழுபது இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளார்கள். இதையடுத்து தமது இறையாண்மையை காத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது
  • இராக்கில் பல ஆயுததாரிகளை கொன்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது : இராக்கின் தலைநகர் பாக்தாத் மற்றும் வட இராக்கில் தமது படையினர் நடத்திய தாக்குதலில் 23 ஆயுததாரிகள் பலியாகியுள்ளதாக இராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 11 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: