September 22, 2007

  • 20:20 கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் :
    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக 20:20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதியடைந்துள்ளது http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • சேது திட்டம் மாற்றுப்பாதை சாத்தியமில்லை - மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு : சென்னையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு மாற்றுப் பாதை வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். மேலும் சேது சமுத்திர கால்வாய் திட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலுக்கு அடியே ஆடம்ஸ் பிரிட்ஜ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. இது இராமரின் வானரசேனையால் கட்டப்பட்ட அமைப்பு என்றும் சேது சமுத்திரத் திட்டத்துக்காக இதை இடிக்கக் கூடாது என்றும் கோரி சில இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன. இப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்து போது, மாற்று பாதை மூலமாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
  • முல்லைத்தீவில் தொடர்ந்து விமானத்தாக்குதல் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அரசின் விமானப்படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன
  • இரான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் - இரானிய அதிபர் : இரான் மீது தாக்குதல் நடத்த எண்ணும் நாடுகளுக்கு இரான் அதிபர் மஹமுது அஹெமதிநிஜாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெஹரானில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் பேசிய இரான் அதிபர், இரானின் இராணுவப் படைகள் தற்பாதுகாப்புக்காக மட்டுமே என்றாலும், தங்கள் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் நிச்சயம் வருத்தத்தை சந்திப்பார்கள் என்றும் கூறினார்
  • தாய்வானின் ஆளும் கட்சியின் தலைவர் இராஜினாமா : தாய்வானின் ஆளும் கட்சியின் தலைவரான யூ ஷி கூன் அவர்கள், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளார்
  • பர்மா போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஆங் சான் சூச்சி வாழ்த்து : பர்மாவின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மிகப்பெரிய போராட்டத்தில், வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூச்சி தோன்றியதன் மூலம் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 22 சனிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: