September 14, 2007

  • சேதுத்திட்டத்தின் போது இராமர் பாலத்தை காப்பாற்ற நடவடிக்கை: இந்திய அரசு அறிவிப்பு : சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றும் போது, இராமர் பாலம் என்று கூறப்படும் பகுதிக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேவைப்படின் மாற்றுப் பாதையில் சேதுக்கால்வாய்த் திட்டத்தை செயற்படுத்துவது குறித்தும் ஆராயப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்று வழிகள் குறித்து ஆராய்வதற்கு மூன்று மாதகால அவகாசம் வேண்டும் என்றும், அந்தக் காலப்பகுதியில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இராமர் பாலத்தைப் பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய மத்திய அரசு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு ஒன்றில் இதனைத் தெரிவித்த மத்திய அரசின் வழக்கறிஞர், இது தொடர்பில் மத்திய அரசும், இந்திய தொல்பொருள ஆய்வு நிறுவனமும் அளித்த பிரமாணப் பத்திரங்களை தாம் வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். மத்திய அரசின் கூற்றை வைத்துப் பார்க்கும் போது இராமர் பாலம் தற்போதைக்கு இடிக்கப்படாது என்பது போல் தென்படுவதாகவும், எனினும் மூன்று மாத கால முடிவில் நிபுணர் குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே இறுதி முடிவு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • அமெரிக்க அதிபர் மீது இரானிய மதத்தலைவர் விமர்சனம் : இரானிய அதியுயர் தலைவர் அயதொல்லா கமனேய் இரானிய தலைநகர் டெஹ்ரானில் நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, அமெரிக்க அதிபர் புஷ் மீது கடுமையான தாக்குதல் ஒன்றைத் தொடுத்திருக்கிறார்
  • பாகிஸ்தானுக்கு அக்டோபரில் திரும்பப் போவதாக பேனசீர் பூட்டோ அறிவிப்பு : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசீர் புட்டோ அவர்கள், தமக்குத்தாமே ஏற்படுத்திக் கொண்ட பல ஆண்டுகால நாடு கடந்த அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு, அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்
  • இராக் அரசு பெரிய முன்னேற்றம் காணவில்லை : இராக்கில் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை நிர்ணயிக்கும் 18 அளவீடுகளில், இராக் அரசு பெரிய அளவில் கூடுதல் முன்னேற்றம் காணவில்லை என்று அமெரிக்க அதிபரின் அலுவலகம் அறிவித்திருக்கிறது
  • வெப்ப அதிகரிப்புக்கு மாசுபடுத்தும் வாயுக்களின் வெளியேற்றத்தை ஏற்பதாக அமெரிக்க அதிகாரபூர்வ விஞ்ஞானி அறிவிப்பு : பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றமே, உலகின் வெப்பத்தை அதிகப்படுத்துவதற்கான பிரதான காரணி என்ற, 90 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பை தாம் ஏற்பதாக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்

No comments: