September 03, 2007

ஒரு நண்பர் குழுமத்தில் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்!

1. ஒன்றுக்கும் உதவாதவர்களை என்ன செய்யலாம்?

இந்த உலகத்தில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று யாரும் இல்லை

2. விமர்சகர்கள் என்றால் யார்?

எந்த ஒரு பச்சாதாபமும் இல்லாமல் தன்னைத்தானே எவனொருவன் முதலில் விமர்சித்துக்கொள்கிறானோ அவனே ஒரு உண்மையான விமர்சகன். உதாரணம் : கவியரசு கண்ணதாசன். அவரே சொன்னது : ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழந்திருக்கிறேன். அதனால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு அறுகதை இருக்கிறது.
3. உங்களை சினிமாத் தணிக்கைக்குழு உறுப்பினராக்கினால்?


நான் முதலில் சொன்னதுபோல் ஒரு நல்ல விமர்சனாகவே இருப்பேன். ஆனாலும் திரைத்துறையில் உள்ள கடைநிலை ஊழியர்களின் வயிற்றில் அடிக்க நான் விரும்பவில்லை. காரணம் நிறையை பேர் வேலை இழந்துவிடுவர்.
4. தர்மம் தலை காக்குமா?


கட்டாயம் காக்கும். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும். நண்பரே! நாமெல்லாம் தமிழர்கள், குறிப்பாக இந்தியர்கள். இந்தக் கேள்வியைத் தயவு செய்து இன்னொரு முறை கேட்காதீர்கள். காரணம் நமது இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் வலியுறுத்துவதே அதைத்தான்.

5. அடுத்தவர் குறைகளையே அலசிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி?
அதில் நீங்கள், நான், யாருமே கவனம் செலுத்தாமல் நமது வேலையைப்பார்ப்போம். அவரும் அவர் வேலையைச் செய்கிறார். செய்துவிட்டுப்போகட்டும். மேற்சொன்ன தருமம் மறுபடி வெல்லும்.

No comments: