October 26, 2007

நான் தமிழன்

"நான் தமிழன்; அதிலும் மதுரைப் பக்கத்துத் தமிழன் என்பதால் அந்தத் தமிழைத்தான் என்னால் அதிகம் பயன்படுத்திப் படம் எடுக்க முடியும். அது நான் வாழ்ந்த சூழல்.. ஒரு கலைஞன் தனக்குள் காட்சிகளும், சப்தங்களுமாகப் பதிந்து போன வாழ்க்கையைத் தான் தனது படைப்புகளில் பதிவு பண்ண முடியும். இங்கிருந்து கொண்டு நான் வாஷிங்டன்னைப் பற்றி ஒன்றும் எடுக்க முடியாது. கி. ராஜநாராயணன் கரிசல் பூமியைப் பற்றி எழுதுகிறார் என்றால் அவர் சார்ந்த கிராமம். அந்த மனிதர்கள், அந்த மொழியில்தான் தோண்டித் துருவி எழுதுகிறார். இன்னும் வாழ்நாள் முழுக்க அவர் எழுதுகிற அளவுக்கு வளத்தைக் கொடுத்திருக்கிறது அந்த மண். அவரைப் போய் ஏன் கோவை மாவட்டத்துக் கொங்குத் தமிழில் எழுதவில்லை என்று கேட்க முடியாது. அது மாதிரி எனக்குத் தெரியாத ஒன்றை நான் படைக்க முடியாது. நான் சார்ந்த மண், நான் சார்ந்த மொழி, பழக்கவழக்கங்கள், தேனி, உசிலம்பட்டிக் காடுகளில் இருக்கிற மனிதர்கள், அந்த வாழ்க்கை தான் நான் அனுபவித்த வாழ்க்கை. மொழியில் சற்று மாறுபட்டிருந்தாலும், அது எல்லோருக்கும் பொதுவான வாழ்க்கைதானே... அதைத் தான் நான் படைக்கிறேன்.
பாரதிராஜா, குமுதம் தீராநதிக்கு (பிப் 2003) வழங்கிய நேர்காணலில்...

No comments: