October 31, 2007

பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு

  • தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது : உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது
  • பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு : அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷனுக்கு 42-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
  • யுத்தச் செய்தி தணிக்கை வர்த்தமானியை இலங்கை அரசு விலக்கிக்கொண்டது : இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தின்கீழ் உணர்ச்சிபூர்வமான இராணுவச் செய்திகளை வெளியிடுவதற்கும், பிரசுரிப்பதற்கும் தடைவிதிக்கும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் இராணுவ யுத்த செய்தித் தணிக்கையை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை மேற்கொண்டிருந்தார்
  • மட்ரிட் ரயில் குண்டுவெடிப்பு: 20 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு : மட்ரிட் நகரில் 2004 ஆம் ஆண்டில் சுமார் இருநூறு பேர்வரை பலியாகக் காரணமான ரயில் குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று, பெரும்பாலும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 20 பேரை ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் ஒன்று குற்றவாளிகளாகக் கண்டுள்ளது
  • இன்றைய (அக்டோபர் 31 புதன்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: