October 14, 2007

"சிலம்பம்" குறும்படம்

தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ள மூளையின் பிரதிபலிப்பும், ஏக்கமும், ஆதங்கமும் இந்தக் குறும்படத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு மெதுவான, சற்று வேகமாக நகராத குறும்படம்தான். ஆனால் சொல்லப்பட்டிருக்கிற விசயம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் எழுத்தாணிகொண்டு எழுதப்பட்டுவிடும் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை. இதேபோன்று நமது கலாசாரப்பிரதிபலிப்புகளோடு பல நல்ல குறும்படங்களைத் தொடர்ந்து எடுக்கவேண்டுமென்று திரு.நா.கவி.குமார் அவர்களைக் கேட்டுக்கொண்டு, அவரையும், அவரோடு இணைந்து பணியாற்றிய அனைத்து நண்பர்களையும் பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.இந்தப்படைப்பாளியின்(நா.கவி.குமார்)அதே ஆதங்கப்பெருமூச்சுடன் இங்கே உங்களோடு இந்தக் குறும்படத்தை இணையத்தில் முதன் முதலாகப் பெருமையோடு பகிர்ந்துகொள்கிறேன். நன்றி- "இசங்கமம் விஜய்" (http://www.sangamamlive.com/)


No comments: