October 10, 2007

உள் ஒதுக்கீடு கோரும் அருந்ததியர்

  • மனித கடத்தல் குழுக்களின் கேந்திரமாக இந்தியா-ஐநா கவலை :
    மனித கடத்தலை தடுப்பதற்கான ஐநா மன்றத்தின் புதிய முன் முயற்சி ஒன்று இந்திய தலைநகர் புது தில்லியில் துவங்கப் பட்டுள்ளது. போதை மருந்துகள் மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கும் ஐநா மன்ற அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, உலக அளவில் பல பத்து லட்சக்கணக்கான பேர், பலவந்தமாக பாலியல் தொழில் மற்றும் அடிமைத்தொழில் செய்யும்படி வற்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் சிறார்கள் என்றும், இவர்கள் மூலம் 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருடாந்த வருமானம் ஈட்டப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்கடத்தல் பிரச்சினை தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் நடப்பதாக தெரிவிக்கும் ஐநா மன்றம், தென்கிழக்கு ஆசியாவில் நிலைமை இதைவிட மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வியாபாரத்தின் முக்கிய கேந்திர இடமாக இந்தியா திகழ்வதாக ஐநா மன்றம் தெரிவித்திருக்கிறது. இங்கிருக்கும் அமைப்பு ரீதியாக செயல்படும் குற்றக் குழுக்கள், பெண்களை யும் குழந்தைகளையும் இந்தியாவுக்கு உள்ளேயும், அதன் அண்டை நாடுகளான வங்க தேசம் மற்றும் நேபாளத்திலிருந் தும் கடத்தி வியாபரம் செய்வதாக கூறியிருக்கிறது
  • உள் ஒதுக்கீடு கோரும் அருந்ததியர் : இந்திய தலித்துகள்தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், ஆறு சதவீதத்தை தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினரான அருந்ததியினருக்கு தனியான உள் ஒதுக்கீடாக அளிக்க வேண்டும் என்று, ஆதித் தமிழர் பேரவை என்கிற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
  • உலக அளவில் மரண தண்டனையை நீக்குமாறு ஐரோப்பிய அமைப்பு கோரிக்கை : போலந்து நாட்டின் எதிர்ப்புக்கு மத்தியில், ஐரோப்பா எங்கிலும் மரண தண்டனைக்கு எதிரான தினமாக புதன்கிழமை அனுட்டிக்கப்படும் நிலையில், ஐரோப்பிய குழு என்னும் மனித உரிமை அமைப்பு, உலக மட்டத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது
  • பாதுகாப்பு செலவினத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை அரசு உத்தேசம் : இலங்கை அரசாங்கம் தனது அடுத்த வருடத்துக்கான பாதுகாப்பு செலவினங்களை 20 வீதத்தால் அதிகரிக்க உத்தேசித்துள்ளது
  • மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர் வானில் பறந்தார் : மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர் இன்று வானில் பறந்தார்
    மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர், கஜகஸ்தானிலிருந்து இன்று விண்ணுக்கு பறந்திருக்கிறார். சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்துக்கு அவர் சென்று கொண்டிருக்கிறார்

No comments: