November 29, 2007

கொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்

  • இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்
  • அவசர நிலையை விலக்கப்போவதாக பாகிஸ்தான் அதிபர் அறிவிப்பு : பாகிஸ்தானில் நான்கு வாரங்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை விலக்கிக்கொள்ளப்போவதாக பாகிஸ்தான அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்திருக்கிறார்
  • கொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு : இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய வன்மையாகக் கண்டித்திருக்கிறார்
  • மட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை : மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்
  • பர்மாவில் புத்த மடாலயத்தை இராணுவத்தினர் மூடியுள்ளனர் : பர்மாவின் ரங்கூன் நகரில் இருக்கும் புத்த மடாலயம் ஒன்றை அந்நாட்டு இராணுவத்தினர் மூடியிருக்கிறார்கள். இந்த மடாலயத்தில், எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வந்தது
  • ஆபிரிக்காவில் சின்னம்மை நோயினால் இறப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது : ஆபிரிக்காவில், சின்னம்மை நோய் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச சுகாதார நிறுவனங்கள் கூறுகின்றன.

No comments: