November 30, 2007

இந்திய கிரிக்கெட் லீக்கின் முதல் போட்டி ஆரம்பம்

கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக, தனியார் நடத்தும் தொழில் முறையிலான சர்வதேச கிரிக்கெட் லீக் ஒன்று, தனது முதல் போட்டியை வடஇந்தியாவில் நடத்திக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் நெறிமுறைப்படுத்தும் அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த போட்டியை அங்கீகரிக்க மறுத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த அமைப்பை ஒரு போக்கிரி அமைப்பு என்று வர்ணித்திருக்கிறது. இந்த அமைப்பு, மேற்கிந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் ப்ரையன் லாரா, முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாம்-உல்-ஹக் போன்ற உலகின் சில மிகச் சிறந்த ஆட்டக்காரர்களை இந்த ஒரு நாள் ஆட்டங்களில் ஆட சேர்த்துக்கொண்டிருக்கிறது. பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்களது நாட்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று எச்சரித்திருக்கின்றன.

No comments: