December 14, 2007

புவி வெப்பமடைதல் தொடர்பிலான ஐ.நா. மாநாடு நிறைவு நேரம் தாண்டியும் நீடிக்கிறது

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்பில் சமரச உடன்பாடு ஒன்றைக் காண்பதற்கான முயற்சியில் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பாலியில் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு இரவாகியும் தொடர்கிறது. மாநாடு முடிவடைவதற்கான கால எல்லை கடந்துவிட்ட நிலையில், சட்ட ரீதியான இலக்குகளை நிர்ணயிக்க முடியுமா என்பதற்கான முட்டுக்கட்டைகளை நீக்க முடியும் என்பதில் சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த இலக்குகளை நிர்ணயிப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. 2020 அளவில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் 40 வீதம் வரை கட்டாயமான வெட்டு வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூறுகின்றன. வறிய நாடுகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக அவற்றுக்கு உதவுவதற்கான கட்டமைப்பு மற்றும் ஒரு புதிய ஒப்பந்த வேலைகளுக்கான நிதி ஆகியவை உட்பட இறுதி ஆவணத்துக்கான பெரும்பாலான எழுத்து வேலைகள் எல்லாம் உடன்பாடு காணப்பட்டு விட்டதாக பாலியில் இருக்கின்ற பிபிசியின் சுற்றுச்சூழல் நிருபர் கூறுகிறார்.

No comments: