December 18, 2007

இந்திய முன்னாள் அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு சீக்கியக் கலவரத்தில் பங்கு விவகாரம்

புதிய விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு : இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் புதிய விசாரணைகளுக்கு தலைநகர் தில்லியிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்துவரும் முக்கிய சாட்சியான ஜஸ்பிர் சிங்கின் வாக்குமூலத்தை மத்திய புலனாய்வுத்துறை-சிபிஐபதிவுசெய்யவேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீக்கியர்களுக்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியதில் டைட்லருக்கு பங்கு இருந்தது என்பதற்கு நம்பக்த்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக அரசு விசாரணையில் தெரியவந்ததை அடுத்து டைட்லர் கட்டாயத்தின் பேரில் பதவி விலகினார். இக்குற்றச்சாட்டினை டைட்லர் மறுக்கிறார்.

No comments: