December 29, 2007

பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை இலங்கையில் அமைதி ஏற்படாது : டக்ளஸ் தேவானந்தா ஆவேசம்

"பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு ஒப்புக் கொள்ளாது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்' என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :
பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு ஒப்புக்கொள்ளாது. எனவே, பிரபாகரன் கொல்லப்பட வேண்டும். அவர் அமைதியை விரும்பவில்லை, இலங்கையை துண்டாடத்தான் விரும்புகிறார். வன்னிப்பகுதியில் வசித்து வரும் மக்களில் 99 சதவீதம் பேர் பிரபாகரனை வெறுத்து வருகின்றனர். இதை விட்டால், புலிகளை இணங்கவைக்க மற்றொரு வழி உள்ளது. அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தாங்கள் கைவிடப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தை ஏற்பட வைத்து அமைதி முயற்சியில் அவர்களாகவே சேரும்படி வைக்க வேண்டும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்தான் தற்போது மோதல்கள் நடந்து வருகின்றன. எனக்கு பொறுப்பு அளிக்கப் பட்டால், ஒரே ஆண்டில் அப்பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவேன். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

No comments: