December 30, 2007

பெனசீர் பூட்டோவின் கட்சிக்கு அவரது மகன் தலைமை

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பெனசீர் பூட்டோவின் கட்சி, பெனசீர் பூட்டோவின் கணவர் மற்றும் அவரது 19 வயதான மகனை கட்சியின் இணைத் தலைவர்களாக அறிவித்துள்ளது. அத்தோடு இன்னும் ஒன்பது நாட்களில் நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்க்க விரும்புகிறது என்பதையும் அக்கட்சி உறுதி செய்துள்ளது. திருமதி பூட்டோவின் மகனான பிலவால், ஜனநாயகத்தை மலர செய்வது தான் சிறந்த பழி வாங்குதல் என தனது தாயார் பலமுறை கூறி இருப்பதாக கூறியுள்ளார். திருமதி, பூட்டோவின் கணவரான ஆசிப் அலி ஜர்தாரி, பாகிஸ்தான் மக்கள் வன்முறையை கைவிட்டு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். அத்தோடு மற்றுமொரு பிரதான எதிர்கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப்பையும் அவர் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

No comments: