December 10, 2007

சர்வதேச சமூகம் குறித்து பாகிஸ்தான் நீதிபதி வருத்தம்

பாகிஸ்தானில் நிலவும் நிலைமைகளைச் சரி செய்யப் போதுமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் விமர்சித்துள்ளார். அதிபர் முஷாரஃப் அவர்களால் நெருக்கடி நிலைச் சட்டத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதியான ராணா பகவான் தாஸ் அவர்களே, பிபிசிக்கு அளித்த அபூர்வமான பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார். தாமும், தம்முடன் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளும் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு, சட்டத்தின் மாட்சிமை மீண்டும் அமல்படுத்தப்படாவிட்டால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமானதாகவும் இருக்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். எந்தவிதமான சட்ட முகாந்திரமும் இல்லாமல், தாமும் தமது சக நீதிபதிகளும் ஏறக்குறைய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments: