February 24, 2008

பதவி விலகுகிறார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்

பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப் பதவி விலகுகிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப்பை ஆதரித்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q) கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்கட்சிகளான பெனாசிர் பூட்டோ கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் பெருவாரியான வெற்றி பெற்றன.

இதனை அடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. அதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்தவர் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் முஷாரப்புக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் அதிபர் பதவியிலிருந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும்கூட பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை தனது பக்கம் இழுத்து, க்யூ பிரிவு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வைத்து ஆட்சியமைக்க முஷாரப் தரப்பு முயன்றது. ஆனால் முஷாரப்பின் கோரிக்கையை ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டார்.

No comments: