April 29, 2008

"கற்பழிப்பு" தலைநகராய் டெல்லி : 4 மாதங்களில் 330 சம்பவங்கள்

இந்தியத் தலைநகர் டெல்லி கற்பழிப்பு சம்பவங்களின் தலைநகராய் மாறிவருகிறது. இந்த ஆண்டின் கடந்த 4 மாதங்களில் மட்டும் 330 கற்பழிப்பு மற்றும் மானபங்கச் சம்பவங்கள் நடந்துள்ளன. கற்பழிப்பு சம்பவங்கள் மட்டும் 121 ஆகவும், மானபங்க சம்பவங்கள் 210 ஆகவும் கடந்த 4 மாதங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 சிறுமிகள் உடபட 14 பெண்களை கற்பழிப்பு செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பழிப்பு கொடுமைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளில் 90 % பேரை கைது செய்திருப்பதாகவும், கற்பழிப்பில் ஈடுபடும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டோருக்கு அறிமுகமானவர்களாகவும் உள்ளனர் என்று டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில்(2007) மட்டும் 581 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 92.8 % குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் 2005- ஆம் ஆண்டில் 685 கற்பழிப்புகள் நடந்துள்ளன.

2007 ஆம் ஆண்டில் கற்பழிப்புக்கு உள்ளானவர்களில் 68 % பெண்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். 26 சதவீதத்தினர் மட்டுமே 10 வகுப்புக்கு மேல் படித்தவர்கள். 80% க்கும் மேற்பட்டவர்கள் வறுமை நிலையில் உள்ளவர்கள் என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தக் கற்பழிப்பு கொடுமைக்கு இந்த மாதம் இரண்டரை வயது குழந்தை ஒன்று பலியாகி இருப்பதுதான் உச்சகட்ட சோகம். மேலும் 2 சிறுமிகளை காருக்குள் வைத்தே குதறிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. ஒரு சாலைப் போக்குவரத்து போலீசார்கூட தன் நண்பரின் மகளை கற்பழித்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம்-ஒரு பண்ணை உரிமையாளரால் தன்னிடம் பணி புரிந்த ஒரு சிறுமியை அவள் குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து கற்பழித்திருக்கிறார். அதேபோல் காது கேளாத, வாய் பேச முடியாத நிலைமையில் உள்ள அப்பாவிச் சிறுமியை ஒரு பஸ் டிரைவர் கடித்து குதறி இருக்கிறார்.

அதேபோல் ஏப்ரல் 16-ல் கணவன் உடபட 4 ஆண்கள் ஒன்று சேர்ந்து கூட்டுக் கற்பழிப்பு நடத்தி உள்ளனர் 40 வயது பெண்மணியை!

இப்படி தினம் தினம் டெல்லியில் கற்பழிப்பு காட்சிகள் அரங்கேறிய வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

No comments: