May 03, 2008

நான் ஒட்டிக்கொண்டு பயனித்த போது

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், தமிழ்பால் பற்றும் கொண்ட ஒரு தமிழ் இளைஞனின் உணர்வுகள் இங்கே பிரதிபலிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணமுடியும்.
தங்கத் தமிழுலகம் - மும்பை சரவணா-வின் இணைய மடலாடற்குழு மின்னஞ்சலை இங்கே தருகிறேன்.
இனி.....
அன்புள்ள குழும உறுப்பினர்களுக்கு வணக்கம், புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய வரவேற்பு. இந்த குழுமம் 2002-ம் ஆண்டு தமிழுக்காக தமிழில் என்ற முகமையுடன் ஆரம்பிக்க பட்டது.

அப்போழுது யுணிக்கோடு எழுத்துறு இல்லாத காலம், ஆரம்பத்திலிருந்தே முரசு அஞ்சல் பயன்படுத்தி வந்து கொண்டிருந்த ஆனாலும் பலர் முரசு அஞ்சல் இறக்கம் செய்ய முடியாத சூழலில் ( அலுவலகங்களில் அல்லது சைபர் கபேக்களில்) நானும் பல கவிதை கட்டுரைகளை எல்லாம் எழுதி பதித்து வந்தும் அது பிரபலமாகாமல் போக காரணம் எழுத்துறு தரவிரக்கம் மேலும் மற்றவர்களை போல் தினம் குழுமத்தை பராமரிக்க வசதியின்மை.

ஆரம்ப காலங்களில் தங்கிலீஸ் டைப்படித்து அனுப்பி வந்தேன். ஆனால் சிலவற்றை எனக்கே படிக்க சிரிப்பு மட்டுமல்ல, புரியவுமில்லை. அதானால் 2004-ற்கு முன்புள்ள அத்தனை பதிவுகளையும் அழிக்க வேண்டியதிருந்தது.

சில நன்பர்களில் யோசனைப்படி அஞ்சல் எழுத்துறுவில் எழுதி அதை பிரிண்ட் எடுத்து ஸ்கேன் செய்து அனுப்பும் முறையையும் செய்து பார்த்துவிட்டேன்.

ஆனால் அதில் செலவு மற்றும் நேரம், இந்த இடைபட்ட காலங்களில் தமிழ் பதிவு பற்றி உலகில் உள்ள பல நன்பர்களிடம் யோசனை கேட்ட பொழுது கிடைத்தது யுனிக்கோடு என்னும் எழுத்துறு.

உண்மையில் இது எனக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லாம்.
பதிய அனுப்ப எளிதானாலும் ஒரு புதிய சிக்கல் 2006 ஆரம்பங்களில் இதன் பயன் புதிய கணினியான எக்ஸ்பி மற்றும் ஹோம் போன்ற வகைகளில் மட்டும்தான் இந்த யுனிக்கோடு வசதி.

அந்த வகை மிஸின் உள்ள கபேக்களை மட்டும் அனுகும் நிலை. ஆனால் பார்ப்பவர்கள் பல அடிக்கடி மடலிடுவது. சரவணா எல்லாம் எண்களாக தெரிகிறது. எல்லாம் எழுத்துறு மாறிவருகிறதென்று. எழுத்துறு தெரிவதற்கு சில செட்டிங்களை சொல்லி விடலாம். ஆனால் பழையவகை சிஸ்டம் உள்ளவர்களுக்கு என்ன செய்ய என்று யோசித்து நாட்களை நகர்த்திவந்த சமயம்(யுனிக்கோடு எழுத்து முறையை இணைய உலகில் முதல் முதலாக பயன்படுத்திய குழுமம் தங்க தமிழ் உலகம்.

அதன் பிறகு யுனிக்கோடு எழுத்து முறை பிரபலமாக 2006-க்கு பிறகு தங்கத்தமிழுலகம் தனது வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்தது. தங்கத்தமிழுலகத்தின் பெயர் இராசியோ என்னவோ தங்கமான பல உறுப்பினர்கள் இணைந்தனர். பொதுவாக தமிழ் குழுமங்களில் அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் உறுப்பினராக இருப்பதும். இளைஞர்கள் பொது மற்றும் நேரப்போக்கிற்கான குழுமங்களில் உலாவருவதும் வழமை.

ஆனால் இங்கு சமய பெரியொர்கள் திரு ஜமால் முகமது ஐயா,
தமிழ் அறிஞர் திரு இராமசாமி, பேராசிரியர் இளங்குமரன் என முது பெரும் அறிஞர்கள் பலர் இருக்க, அதுமட்டுமா சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் பலர் கொண்ட குழுமம் இது. இன்று திருச்சி மாநகரில் மின்னும் இராதாகிருட்டினர் கல்வி சேவை மையத்தை உறுவாக்கிய திரு.ஆனந்த் அவர்கள். கல்வி சேவை மையத்தின் நூலக ஆரம்ப விழா புகைப்படங்கள்
இந்த சுட்டிக்கு செல்லவும் http://picasaweb.google.co.uk/ananthprasath/DRCETInaugurationFunction . சென்னையில் பல சேவை மையங்களுடன் இணைந்து தனது நண்பர்களையும் சேர்த்து பல உதவிகளை செய்து வரும் திரு கலாநிதி அவர்களும் நமது குழும உறுப்பினர். இவரது சேவைகளுக்கு சிறிய உதாரணம் ஆர்குட் என்னும் இந்த பொது குழுச்சுட்டியில் சில நிழற்படங்கள்.

http://www.orkut.com/Album.aspx?uid=17766463706336935098&aid=1209340620

பொதுவாக குழுமங்கள் ஆரம்பித்த இடத்தின் சுற்றுப்புற நண்பர்களுடன் அறிமுகமாகி பிறகு அனைவரிடமும் போய்ச்சேரும் ஆனால் தங்கத்தமிழுலக குழுமத்தை பொருத்தவரை, ஆரம்பகால உறுப்பினர்கள் அனைவரும் சிட்னி, சவுபொலே, ஒஸ்லோ, பாரீஸ், ஜெனிவா மற்றும் லண்டன், நியு ஜெர்ஸி என ஆரம்பித்து இன்று சென்னை திருச்சி அருப்புகோட்டை, தக்கலை, மதுரை என பயணிக்கிறது.

மேலும் சமீபத்தில் வெளியிட்ட தமிழ் குழும அட்டவனையில் 10-ற்குள் ஒன்றாக வந்தது பெருமைபடக்கூடிய விடயமாகும்.

சமீபத்தில் இணைந்த திரு.நவநீதன் (நவின்/நவநீ/மனுநீதி) அவர்களை பற்றி : தமிழ் இணைய உலக நண்பர்களுக்கு மிகவும் பிரபலமானவர். சமீபத்தின் தோன்றி கலக்கிக்கொண்டிருக்கும் அதிகாலை.காம் http://www.adhikaalai.com/ என்ற இணையம் இவரது கைவண்ணம், மேலும் நிலாச்சாரலில் இவரது சாரல் அதிகம். பிலாக்ஸ்-களில் மனுநீதி http://manuneedhi.blogspot.com/ http://manuneedhis.blogspot.com/ http://manuneedhys.blogspot.com/ http://manuneedhigallery.blogspot.com/ http://manuneedhy.blogspot.com/ http://360.yahoo.com/navneethsmart http://www.esnips.com/user/manuneedhi இவரது கைவண்ணம்தான். ஒரு முறை யாழ்சுதாகரிடம், இளைய இராசாவின் பாடல்களை பற்றி சாட்டிங்கில் அரட்டிக்கொண்டிருந்த நேரம் இன்னும் தமிழ்நாட்டில் இணையத்தமிழ் பரவவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது பல தமிழ் இணையங்களை அட்டவணையிட்டோம்.

அப்பொழுது மனுநீதி http://manuneedhi.blogspot.com/ பற்றியும் பேச்சுவந்தது.
ஆனால் கடந்த சனவரி அன்று எனக்கு
நவநீதன் சார் அறிமுகமானார்கள்.

அவரும் எனக்கு பல ஆண்டுகளாய் மடலெழுதியுள்ளார். நானும் பலமுறை அவரது எழுத்துக்களை படித்துள்ளேன் ஆயினும் இன்னார் என்று தெரியாமல் பல மாதங்களாய பேசி, பிறகு "சார் நீங்களா?... சரவணா! நீதான் அந்த சரவணா-வா!" என்று அறிமுகம்.

டைம்ஸ் ஆப் இந்தியா திரு.இராகவன் அவர்கள் 2 வருட பழக்கம். குழும பதிவுகளை பார்த்து அவ்வபொழுது பதில் எழுதுவார். சமீபத்தில் செம்பராப் காமர்ஸ் மும்பை ஒரு விழாவிற்கு சென்றபோது நான் பணிபுரியும் நிறுவனத்தின் அதிகாரியுடன் பேசிக்கோண்டிருந்தார்.

நான் கடை நிலை ஊழியன். லக்கேஜ் தூக்கத்தான் நம்மையும் விழாவிற்கு அழைப்பார்கள்.

எனது உயரதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்த இராகவன் சார் என்னை கண்டதும் அவரிடம் 'யார் இந்த பையன்? எங்கேயோ பார்த்த நினைவு' என்று சொல்ல அந்த அதிகாரியும் "இது சரவணன் எனது நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளி" என்று சொல்ல சரவணன் என்று சொன்ன உடனே சட்டென பிடித்து கொண்டார். என்னை அருகில் அழைத்து "தம்பி நீதான் கோல்டன் தமிழ் வேர்ல்ட் சரவணாவா" என்று வினவ அவர்தான் எனது அதிகாரியிடம் என்னை பற்றி அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதுதான் தமிழுக்குள்ள ஒரு சக்தியோ என்னவோ.

அடுத்து நமது உறுப்பினர் மற்றும் உலகத்தமிழர்களிடத்தில் பிரபலாமன ஒருவர் திரு.நடராசன், 'வாரம் ஒரு ஆலயம்' இன்று 60 வாரங்களை தொட்டுக் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஆலயத்தை அதன் மூலம் முதல் ஆழம் வரை சென்று தகவல்களை திரட்டி வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதனை தமிழ் படிக்க தெரியாதவர்களுக்காக ஒலிவடிவில் கொடுத்து வருவது மிகப்பெரும் சாதனை. ஆரம்பித்த முதலாம் வாரத்திலிருந்து இன்றுவரை தங்கத்தமிழுலகத்தின் ஊடாகவும் வாரம் ஒரு ஆலயம் பயணித்திருப்பது ஒரு பெருமைப்படக்கூடிய விடயமே.

சரியாக ஒரு வருடத்திற்க்கு முன்பு வாரம் ஒரு ஆலயத்தில் ஆரம்ப வாரங்களில் எங்களுக்குள் நடந்த உரையாடல்.
10:18:17 PM rajesaravana: hi ji Vanakkam
10:18:46 PM natar_77: hello saravanan
10:19:10 PM rajesaravana: Sir Ungka name enna
10:19:24 PM natar_77: nataraj
10:19:56 PM rajesaravana: ok ok ambala vaanan sthampara nataraajan ;)
10:20:20 PM natar_77: is your yahoomailid rajesaravana@yahoo.com
10:20:34 PM rajesaravana: yes sir
10:20:56 PM natar_77: Thirvadirai star so nataraj name :-)
10:20:56 PM rajesaravana: neenga neeRRu konjam varuththapattiingka illa
10:21:20 PM natar_77: amam konjam varautha, innamum undu
10:21:59 PM rajesaravana: ungkaLukku theriyumaa oru lady unga mailukku oru replay anuppiirunthaangka
10:22:11 PM natar_77: who?
10:22:38 PM rajesaravana: kaRpakaampikai paRRi keetuirunthaarkaL
10:23:37 PM rajesaravana: naapagam illiyaa????
10:23:55 PM natar_77: truthfully,illa sir..but I save my messages,I'll look at my messages
10:24:31 PM rajesaravana: niingka sonna piRaku naan ungka mails ellaaththiyum sek panni parththen
10:24:43 PM rajesaravana: appa avarkaLil mail kitaiththahtu
10:24:55 PM natar_77: oh is it garbharakshambigai
10:25:07 PM rajesaravana: yesss
10:25:13 PM natar_77: yeah i remember
10:25:32 PM natar_77: because I haven't told karpagambigai yet
10:25:49 PM rajesaravana: paarththiiinkaLaa ungka mails evvaLvu peeriya oru uthavi seythirukkirathu
10:26:17 PM rajesaravana: appuram een saar varuththapaturiingka
10:26:55 PM rajesaravana: is okk but ellorum patikka thanee seyraangka ungka mails
10:27:05 PM rajesaravana: no one miss your message
10:27:11 PM rajesaravana: so now you happy
10:27:27 PM natar_77: illa actually the problem was ,Actually I tried posting vaaram oru alayam to one of tamil message baords, they harshly replied back to remove and really sent strong emails to me
10:27:56 PM natar_77: but after talking ith you am happy now
10:28:03 PM natar_77: thanx for encouragement
10:28:07 PM rajesaravana: dont worry naalikku oru message ellorukkum anuppukiren
10:28:34 PM natar_77: thank you so much
10:30:59 PM natar_77: k see you bye

மேலும் பிரான்ஸ் ஜனநாதன் அம்மா அவர்களையும் இந்த மடலில் நினைவு கூர்கிறேன். தமிழ் எழுத படிக்க தெரியாவிட்டாலும், எனது மடல்களை பார்த்து அவர்களது கணவரிடம் பிரென்ஸில் டிரன்ஸ்லேட் செய்து படிப்பார்கள். முக்கியமாக எனது மும்பை ஒரு நாள் கதையை அடிக்கடி படித்து சிரிப்பார்களாம் அவர்களது குடும்பமே சாப்பிட அமரும் வேளையில் நினைவு கொண்டு மகிழ்வார்கள்.

இந்த ஆறுவருட காலம் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. விரைவில் தனது 7-ம் வருட அகவையை தொட்டிருக்கும் தங்கதமிழ் உலகம் தற்போது உங்களின் உலகமாக மலர்ந்துள்ளது

இந்த வருட முடிவிற்குள் சொந்த கணினி ஒன்று வாங்க முயற்சி எடுத்துள்ளேன். உங்களின் ஆதரவிற்கு எனது பணிவான வணக்கங்கள்.

அன்புடன்
சரவணா மும்பையிலிருந்து

No comments: