June 14, 2008

தந்தையர் தினம்! - ஆல்பர்ட்

அந்த தினம் இந்த தினம் என்று ஆயிரம் தின‌ங்க‌ள் இருக்குது. ஆனாலும் இந்த‌ இய‌ந்திர‌ம‌ய‌மான‌ உல‌க‌த்தில் ஒவ்வொரு தின‌த்துக்குப் பின்னும் ஒவ்வொரு நிஜ‌ங்க‌ள் நிழ‌லாக‌த் திகழ்வ‌தையும் ம‌றுத்துவிட‌ முடியாது. சீர்காழியின் ஒரு பாட‌ல் நினைவுக்கு வ‌ருகிற‌து. பாட‌ல் முழுவ‌துமாக‌ நினைவிற்கு வர‌வில்லையென்றாலும் சில‌வ‌ரிக‌ளைச் சொல்லுவ‌து இங்கு பொருத்த‌ம் என‌ நினைக்கிறேன்.

"ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிர‌ம் இருக்குது சுப‌தின‌ம்! லாட்ட‌ரிச் சீட்டில் ல‌ட்ச‌ம் விழுந்தால் அது கிடைத்த‌வ‌ருக்கே சுப‌தின‌ம்..." இப்ப‌டியாக‌ப் போகும் அந்த‌ப் பாட‌ல். பாட‌ல் உண‌ர்த்துவ‌திலிருந்து ஒன்றை நாம் நிச்ச‌ய‌மாக‌ அறிந்துகொள்ள‌ இய‌லும்.

த‌ன்னை வ‌ள‌ர்த்த‌ த‌ந்தை, என்ற‌ பாச‌மிகுதியால் ம‌ன‌ம் கோணாம‌ல் க‌வ‌னித்துக் கொள்கிற‌ ம‌க‌ன்க‌ள் இருக்கும்வ‌ரை அந்த‌த் த‌ந்தைய‌ர்க‌ளுக்கு என்றும் சுப‌தின‌ம்தான்! எல்லா அப்பாக்களுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை; மகனின்,மகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு சுபதினம்?

முதியோர் இல்ல‌ம் என்றில்லை, வீட்டுக்குள் நுழைந்தால் மரும‌கள் என்ன‌ சொல்வாளோ? இல்லைம‌ரும‌க‌ள் பேச்சைக்கேட்டு ம‌க‌ன் என்ன‌ சொல்வானோ என்று கால்வ‌யிற்றையும் அரைவ‌யிற்றையும் நிர‌ப்பிக்கொண்டு திண்ணையே க‌தி என்றிருக்கும் த‌ந்தைமார்க‌ளுக்கு வ‌ருட‌த்தில் இந்த‌ ஒருநாளாவ‌து சுப‌தின‌மாக‌ இருக்க‌ட்டுமே,என்றால் "த‌ந்தைய‌ர் தின‌ம்" இருந்துவிட்டுப் போக‌ட்டுமே!

அன்னையர் தினம் வரும், பின்னே..... தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்? தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/தந்தையர்-தினம்-ஆல்பர்ட்

No comments: