September 22, 2010

www.ValaiTamil.com பகிர்தல் தளம் : இதோ அதிகாலையின் மற்றுமொரு தமிழ்ச்சேவை

வணக்கம் அன்பு வாசக நெஞ்சங்களே!

தமிழ் நெஞ்சங்களுக்கு ஓர் நற்செய்தி : இதோ அதிகாலையின் மற்றுமொரு தமிழ்ச்சேவை

தங்களின் தொடர்ந்த ஒத்துழைப்பிலும், பேராதரவிலும் நமது அதிகாலை தளத்தினை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையேயும், சட்ட அச்சுறுத்தல்களுக்கிடையேயும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கிடையேயும், எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தமிழுக்காகவும், தமிழ்ச் சமூகத்திற்காகவும் சேவையாற்றும் ஒரே நோக்கில், விடா முயற்சியாக தொடர்ந்து நடத்தி வருவது தாங்கள் அறிந்ததே. ஊடகத்துறை முழுக்க முழுக்க வியாபாரமாகிவிட்ட இத்தருணத்தில், தமிழின்பால் பற்றும், தமிழ்ச் சமூகத்தின் மீதான அக்கறையும் கொண்ட நண்பர்களின் ஒத்துழைப்பால் அதிகாலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கிலும், இச்சேவையை விரிவு படுத்தும் நல்லெண்ணத்திலும் அதிகாலை பெரும் கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில், தனியொரு நபரால் ஒரு தளத்தை நடத்துவதென்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பது அதிகாலையை உற்று நோக்கிவரும் உள்ளங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எமக்காக பல்வேறு தருணங்களில் ஆறுதலோடு கூடிய ஆதரவளித்த நல்லுள்ளங்களையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறோம். தற்போதுள்ள சூழலில் அதிகாலை வாசக நண்பர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாததால், அனைவருக்கும் பயனுள்ள வகையில் மற்றுமொரு பகிர்தல் தளத்தினை www.valaitamil.com உருவாக்கியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக "வெகுவிரைவில் அதிகாலை புதுப்பொலிவுடனும், வாசக நெஞ்சங்களின் அனைத்து விருப்பத்தினையும் பூர்த்தி செய்யும் வகையிலும் அமையும்" என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதுவரை, வழக்கம்போல் தங்களின் மேலான ஒத்துழைப்பையும், நல்லாசிகளையும் எமது அதிகாலைக்கும், அதன் மற்றுமொரு பகிர்தல் தளமான வலைதமிழ்.காம் தளத்திற்கும் வழங்குவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையில் இத்தளங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். நன்றி.

அதிகாலை மற்றும் வலைதமிழ் நண்பர்கள் குழு
http://www.adhikaalai.com/ & http://www.valaitamil.com/

No comments: