June 29, 2007

நாலடியார்

1. அறத்துப்பால்

1.4 அறன் வலியுறுத்தல்

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு


- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை


அரிதுக்கு அரிதாக கிடைத்த மானுடப் பிறவியை, அரியவை செய்யவே பயன்படுத்தவேண்டும். அப்படிச் செய்யாவிடில் இந்த உடம்பு கரும்பின் சாற்றை எடுத்துவிட்டு அதன் சக்கையைக் கெடவிடுவது போலக் கெட்டுப்போகும்.
- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை


Having obtained a human body, so difficult of attainment, so act as to procure great merit by it, for in the next birth charity will profit thee as the juice of the sugarcane when pressed, while thy body will decay like the refuse cane.

by Rev.F.J.Leeper, Tranquebar

No comments: