July 02, 2007

பழ. நெடுமாறன் உரை

ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், அந்த ஒரு துப்பாக்கியும், அருமைத் தம்பி பிரபாகரனின் நெருங்கிய தோழன் பண்டிதர். பண்டிதரின் தாயார் ஒரே ஓரு பசுமாட்டை வைத்து பால் கறந்து விற்று குடும்பத்தை காத்து வந்த நிலையில், அந்த பசுமாட்டை தன் தாயாருக்கு தெரியாமல் பண்டிதர் ஓட்டிச் சென்று விற்று, அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய ஒரே ஒரு துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இன்று மரபு வழி இராணுவமாக வளர்ந்து, சிங்கள கடற்படையை ஓட ஓட விரட்டியடிக்கும் கடற் புலிப்படையை தன்னகத்தேக் கொண்டு, இன்று வரன் புலிகளையும் பறக்க விடும் அளவிற்கு முப்படைகளோடு வளர்ந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றோம் என்று ஒவ்வொரு உலகத் தமிழனும் பெருமைப்பட வேண்டும். இலண்டன் அய்பிசி தமிழ் வானொலி சேவையின் ஆண்டு விழாவில் பழ. நெடுமாறன் உரை தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. மேலும் ஒலிப்பதிவில் இடையிடையில் தடங்கல் இருக்கும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன். மன்னிக்கவும்.Thenseide - HOME

No comments: