August 27, 2007

எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி

  • ரஷியாவில் செய்தியாளர் ஆனா பொலிட்கொவ்ஸ்காயா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னாள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தார்கள் என தாம் எண்ணுவதாக ரஷியாவின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
  • இலங்கையின் வடக்கே யாழ் நகரில் படைத் தளத்திற்கு அருகே வசிக்கும் மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. குடும்பத்தினரின் புகைப்படங்களை வழங்குமாறும் உத்தரவு.
  • அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஆல்பர்டோ கொன்சாலெஸ் இராஜிநாமா செய்துள்ளார். அவர் அதிபர் புஷ் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களில் ஒருவராக இருப்பவர்.
  • வங்கதேசத்தின் உச்சநீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஷசீனாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
  • இராக்கியப் பிரதமர் நூரி அல்மலிக்கி அவர்களை விமர்சித்து, அவர் பதவி விலக வேண்டும் எனத் தாம் தெரிவித்திருந்த கருத்துக்களுக்காக இராக்கிய அரசிடம் தாம் மன்னிப்பு கோரவுள்ளதாக பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் கௌஷ்னே தெரிவித்துள்ளார்.
  • பசபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 27 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: