August 27, 2007

இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்திய ஒருபோதும் வழங்கக்கூடாது - தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன். இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்தியா ஒருபோதும் வழங்கக்கூடாது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு, இனவாத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான அரசாக இல்லை. சுனாமியில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களைக்கூட அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு அப்பாவித் தமிழர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நமது நாடு நடுநிலையோடு செயல்படவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். இலங்கைக்கு இந்தியா ராடர் கருவிகளை கொடுத்துள்ளது. அது தமிழர்களை தாக்குவதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு இந்தியா வழங்கக்கூடாது. இந்த விஷயத்தில் பழ. நெடுமாறனின் போராட்டம் நியாயமானதுதான்.

No comments: