August 28, 2007

குளவி கொட்டி பலர் மருத்துவமனையில் அனுமதி

  • இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்பிரசித்திபெற்ற புராதன சின்னங்களில் ஒன்றான சிகிரியா மலைச் சுவரோவியங்களைக் காணச்சென்ற உல்லாசப்பயணிகள்மீது அங்குள்ள குளவிக் கூட்டமொன்று நடத்திய தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
  • அனைவருக்கும் அறிவியல் : அல்சைமர் எனப்படும் மூளை அழுகல் நோய் தொடர்பில் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் சாதகமான சில முடிவுகளை தந்திருக்கின்றன.
  • மதச் சார்பற்ற நாடான துருக்கியின் அதிபராக, இஸ்லாமியப் பின்னணி கொண்ட அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் பதவியேற்றுள்ளார்.
  • அணு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசுக்கு காலக் கெடு விதிக்கப்போவதில்லை : சி பி ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் துவங்கியது. இந்தியா- அமெரி்ககா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  • ஆப்கனில் கஞ்சா பயிரிடுவது அதிகரிப்பு : ஹெராயின் போதைப் பொருட்களை தயாரிக்க உதவும் கஞ்சா செடிகள் பயிரிடப்படும் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக, ஆப்கானிஸ்தானின் போதைப் பொருள் தயாரிப்பு குறித்த ஐக்கிய நாடுகளின் வருடாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்றைய (ஆகஸ்ட் 28 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: