September 07, 2007

இந்தியா – இலங்கை உயர்நிலைப் பாதுகாப்புக்குழு : உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுப்பு : இந்தியா – இலங்கை இடையே, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப் பட்டிருப்பதாக, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், கடந்த வாரம் புதுடெல்லி வந்து, இந்தியாவின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள்
முள்ளிக்குளம் பகுதியை கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு :
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் தென்பகுதி கரையோரக் கிராமமாகிய முள்ளிக்குளம் பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன
தமிழ் கட்சிகளின் வருகையைக் கண்டித்து மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரம் : இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ,ஈ.பி.டி.பி.உட்பட சில தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகள் வைத்திருப்பவர்களுக்கு சென்னன் படை என்ற பெயரில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ''ஆலவட்டம் பிடிப்போருக்கும் ஆதரவு வழங்குபவர்களுக்கும் எச்சரிக்கை" என்ற தலைப்பில் இது தொடர்பான பிரசுரங்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனை வரி 10 வீதமாக அதிகரிப்பு : இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 40 சதவீதத்தினர் தொலைபேசி இணைப்புக்களைக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ள இலங்கை அரசு, நாட்டில் சுமார் 6.3 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகளும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது
மேலும் தொடர்ந்து இன்றை (செப்டம்பர் 07 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: