September 07, 2007

திருமுருகக் கிருபானந்த வாரியார் சொல்கிறார்

"எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் மகிழச் செய்கிறவனாகவும் ஒருவன் இருக்க முடியாது. சந்திரன் குளிர்ந்த அமுத கிரணங்களை உலகிற்கு வழங்குகிறான். முழு நிலவைக் கண்டு எல்லா உயிர்களும் உவகையுறுகின்றன. ஆனால் முழு நிலவைக்கண்டு தாமரை குவிந்து விடுகின்றது. சந்திரன் தாமரைக்கு என்ன தீங்கு செய்தான்? ஒன்றுமேயில்லை. சந்திரனைப் போல் உலகுக்கு நன்மை செய்யும் நல்லோரைக் கண்டு சில புல்லோர்கள் இகழ்வார்கள்; வெறுப்பார்கள்; பகைப்பார்கள்; அதனால் நல்லோர்க்கு ஒன்றும் குறைவு உண்டாகாது"

No comments: