September 17, 2007

அன்றும் இன்றும் - மழை

* * * அக்காலம் மாதம் மும்மாரி * * *

வேதம் ஓதிய அந்தணர்க்கு ஓர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை
மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே!

* * * இக்காலம் வருடம் மும்மாரி * * *

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருஷனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை
வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே!

(மூலம் : விவேக சிந்தாமணி)

No comments: