September 26, 2007

  • 'உலக நாடுகளைப் பழிவாங்கும் கருவியாக மனித உரிமைகள் பயன்படுத்தப்படக் கூடாது' - ஐ.நா பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த உரை : மனித உரிமைகள் என்ற விடயத்தை உலக நாடுகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் ஒரு கருவியாக பயன் படுத்தக் கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்சபையின், 62 வது வருடாந்த சந்திப்புக்கான தனது உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்
  • பர்மா பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் கருத்து : பர்மா பிரச்சினை தொடர்பாக இந்தியா முதன் முறையாக இன்று கருத்துத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்மாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும், பர்மாவின் அரசியல் சீர்திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக, பரந்துபட்ட நடைமுறையாக இருக்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் விரும்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • பர்மாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது : பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது இராணுவத்தினர் தாக்கியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன
  • நேபாளத்தை குடியரசாக்குவதற்கு நேபாளி காங்கிரஸ் ஆதரவு : நேபாளத்தை குடியரசாக அறிவிப்பதற்கு, தனது ஆதரவை அந்த நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான நேபாளி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    இந்த ஆண்டு நவமபர் மாதம் தேர்தெடுக்கப்படவுள்ள அரசியல் சாசன சபை, இந்த மாற்றத்ததை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளனர்
  • இலங்கையின் வடபகுதி மோதலில் 13 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தைக்கு மேற்கில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் எறிகணை வீச்சு மற்றும் நேரடி மோதல்களில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 9 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது

No comments: