September 26, 2007

இராமர் பால ஆராய்ச்சியில் ஈடுபடும் அதிமேதாவிகளுக்கு எனது பணிவான வேண்டுகோள்!!

"சேது சமுத்திரத் திட்டத்தை வரவேற்பது ஒவ்வொரு தமிழனும்? ஏன் இந்தியனும் வரவேற்கத்தக்க ஒரு விசயம். நாமெல்லாம் அந்த இராமர் பாலத்திற்கு வரிந்து கட்டிக்கொண்டு விளக்கம் கொடுப்பதும், விதண்டாவாதம் பேசுவதையும் நிறுத்தினால் நலமாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். அதில் செலவழிக்கும் நேரத்தை, சேது சமுத்திரத்திட்டத்தின் மூலம் நாம் அடையப்போகும் பலன் என்ன? நன்மைகள் என்னென்ன? என்பதை விளக்கினால் உபயோகமாகவும், என்னைப்போன்ற பாமரர்களுக்குப் புரியாத விசயங்களைப் புரியவைத்த பாக்கியமும் உங்களைப்போன்ற, இன்னும் இந்த இராமர் பால ஆராய்ச்சியில் இறங்கி நோண்டிக் களைபறிக்கும் அதிமேதாவிகளுக்கும் புண்ணியமாகும். எனவே மேற்கொண்டு மண்டபத்திலிருந்து வானர சேனைகள் பாலமில்லாமல் இராமேஸ்வரத்திற்கு எப்படிப் போனார்கள், தனுஷ்கோடி இருந்தது உண்மையா? போன்றைவகளுக்கு விளக்கம் கேட்கப்படும் கேள்விகளும், அம்மாவுடன் கூடப்பிறந்த ஆண்களை ஏன் சின்னம்மா, பெரியம்மா என்று அழைக்காமல் மாமா என்று அழைக்கிறோம் என்று கேட்கப்படும் கேள்விகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். முடிந்தால் புரியாதவர்களுக்குப் புரியாத விசயங்களைப் புரியவைக்க நாமெல்லாம் சேர்ந்து முயற்சிப்போம்"
- நன்றி மனுநீதி

No comments: