September 23, 2007

கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும்

  • பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் : விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் சனிக்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் பேசும் போது, ராமரை இழித்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பதட்டம் அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமையன்று இந்துத்துவா சக்திகளைக் கடுமையாகக் கண்டித்து மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்து இருந்தார். ஞாயிற்றுகிழமை தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் பாரதிய ஜனதா அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் ஜன்னல்கள், கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையினரே காரணம் என்றும், காவல்துறையினர் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் குமாரவேலு குற்றம்சாட்டியுள்ளார்
  • பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புங்கள் என்று இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள், விடுதலைப் புலிப் போராளிகளை அமைதிப் பேச்சுக்களுக்கு திரும்பும்படி கேட்டுள்ளார்
  • இலங்கையில் தொடரும் வன்முறை : இலங்கையின் வடக்கே சனிக்கிழமையன்றும், ஞாயிற்றுக்கிழமையன்றும் இடம்பெற்ற வெவ்வேறு வன்முறைகளில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
  • ஜப்பானின் புதிய பிரதமராகிறார் யசோ ஃபக்குடா : ஜப்பானின் மூத்த அரசியல்வாதியான யசோ ஃபக்குடா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கிறது : இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள், பாலஸ்தீன அதிபர் மஹமுது அப்பாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுமார் தொண்ணூறு பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • பர்மா ஆர்ப்பாட்டத்தில் பெரும் கூட்டம் : பர்மாவின் பிரதான நகரமான ரங்கூனில் அந்நாட்டின் இராணுவ அரசுக்கெதிராக இது வரை நடந்த ஆர்பாட்டங்களிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டமொன்றில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
  • இன்றைய (செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: