நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள கொன்னையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், சாந்தாமணி தம்பதியர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பால் கறப்பதற்காகக் கடந்த வருடம் வாங்கி வந்த சிந்து இனப்பசு ஒன்று கடந்த புதன் இரவு பத்துமணியளவில் அனைவரும் வீட்டிற்குள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புதைந்து மெகாசீரியல்களில் அழுதுகொண்டிருக்கும்போது, திடீரெனச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து பார்த்தனர். வெளியில் உள்ள தெருவிளக்குக் கம்பத்தில், கட்டாந்தரையில் லேசான தடுமாற்றத்தோடு துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த கன்றுகளைப் பார்த்ததும் தன்னை மறந்து அனைவரும் சந்தோசக்களிப்பில் துள்ளிக்குதித்தனர். அந்தச்சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு வந்து பார்த்துச் செல்கின்றனர். கன்றுகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு பசு ஒரு கன்று ஈனுவதே வழக்கம். செய்தி : நண்பர் விஜய் - திருச்செங்கோடு
திரு."யாழ் சுதாகர்" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..
"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக"
No comments:
Post a Comment