October 21, 2007

எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார் - தமிழக முதல்வர்

"அரசின் நல்ல திட்டங்களுக்கு முட்டுக் கட்டைகள் போடும் கூட்டணி நண்பர்கள், அரசியல் கட்சிகள் எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். எங்களால் முடியாவிட்டால், இவ்வளவுதான் முடிந்தது என்று உங்களிடம் விடை பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இதற்கு மேல் வேறு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் வேறு யாராவது வந்து செய்யட்டும். நான் தாராளமாக அவர்களை வாழ்த்த, பாராட்ட, அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டக் கடமைப்பட்டுள்ளேன்" - மு. கருணாநிதி, தமிழக முதல்வர்

No comments: