November 22, 2007

முஷாரஃப் காட்டில் மழை

  • முஷாரஃப் அதிபராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்க்கும் இறுதி வழக்கையும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர் : பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃபுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த நீதிபதிகளை அவர் விலக்கிய பிறகு அமைக்கப்பட்ட புதிய உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் குழு அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட இறுதி வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. இது அவர் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவெற்ற வழிவகுக்கிறது. அவர் இராணுவத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என்பது அவரது எதிரிகள் மற்றும் பாகிஸ்தானின் மேற்குலக கூட்டணி நாடுகளின் முக்கிய வலியுறுத்தலாக இருந்தது. தமக்கெதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடக்கூடும் என்கிற ஊகத்தில் அவர் இந்த மாதத்தின் முற்பகுதியில் அமல்படுத்திய நெருக்கடி நிலை இன்னமும் தொடருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நெருக்கடி நிலையை விலக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்ய விருப்பததாக அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறுகிறார்
  • இராக் மோதல்கள்: முப்பதுக்கும் அதிகமானோர் பலி : இராக்கில் பாதுகாப்புப் படையினருக்கும் அல்கைதா போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் முப்பது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்
  • ஐரோப்பாவில் கொகெய்ன் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது - கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை : கொகெய்ன் போதைமருந்து பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளிலும் வேகமாக அதிகரித்துவருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது
  • ஜிம்பாப்வே விவகாரம்: தென்னாப்பிரிக்கா சமரச முயற்சி : தென்னாப்பிரிக்க அதிபர் தாபோ ம்பெகி ஜிம்பாப்வே சென்றுள்ளார்.
    காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா செல்லும் முன்னர் ஜிம்பாப்வே அரசாங்கத்துடனும் எதிர்கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்காக அவர் அங்கு சென்றார்
  • சோமாலியாவில் புதிய இடைக்கால பிரதமர் : நூர் ஹசன் ஹுசைன் சோமாலியாவின் செம்பிறைச் சங்கத்தின் தலைவரான அந்நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • தொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி : இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments: