November 22, 2007

பாகிஸ்தானில் அடுத்து என்ன? - ஒரு ஆய்வு

பாகிஸ்தானில் எல்லாமே அதிபர் முஷாராஃப் அவர்களின் திட்டப்படிதான் சென்று கொண்டிருப்பது போலத் தெரிகிறது. அங்கு சுதந்திரமாகச் செயற்பட்ட நீதிபதிகள் மாற்றப்பட்டு அவருக்கு இசைவாக செயல்படும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுளார்கள். நானே தொடர்வேன் என்கிறார் முஷாரஃப்இதன் காரணமாக அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு ஏற்பட்டிருந்த உடனடியான அச்சுறுத்தல்களை அவர் புறந்தள்ளியுள்ளார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் பதவியில் தொடரும் தனது அபிலாஷையில் அவர் வென்றுள்ளார் என்றுதான் கூறவேண்டும். தான் பதவியில் தொடருவது உறுதியாகியுள்ள நிலையில், பலர் அவரிடம் எதிர்பார்த்த தேவைகளை, சலுகைகளை இறுதியாக அவர் அளிக்கக் கூடிய நிலையில் இருக்கிறார். அதாவது இராணுவத் தலைவர் பதவியை அவர் துறப்பது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரக் கூடும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிபர் பக்கம்சரி இவைவெல்லாம் அவரை எங்கே அழைத்துச் செல்கின்றன? அவர் நெருக்கடி நிலையை அமல்படுத்திய போது சர்வதேச கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா உட்பட தமக்கு ஆதரவளிக்கும் நெருங்கிய சக்திவாய்ந்த நாடுகளின் கோபத்துகு ஆளானார். இதனிடையே காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் இன்று கூடி காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடை நீக்கம் செய்வது குறித்து ஒரு முடிவினை எடுக்கவுள்ளார்கள். இந்த நிலையில், தம்மிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் பாதியளவை தாம் நிறைவேற்றியுள்ளதாக அவர் வாதிடக் கூடும். பாகிஸ்தானில் திட்டமிட்டபடி தேர்தல்கள் நடைபெற வேண்டும், அதிபர் முஷாரஃப் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அமெரிக்கா முன்னர் கோரியிருந்தது. இந்த இரண்டும் தற்போது நடைபெறுகின்றன. நெருக்கடியின் கெடுபிடிகள்அங்கு அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இருந்தபோதிலும் இன்னமும் சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் கவலைகள் உள்ளன. அங்கு நடைபெறவுள்ள தேர்தல்களின் பிரச்சார காலம் முழுவதும், அடிப்படை அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் எவ்வளது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்? தேர்தல்களை புறக்கணிக்கப் போவதாகக் கூறுகிறார் புட்டோதமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில், எதிர்கட்சிகள் நடைபெறவுள்ள தேர்தல்களில் பங்கேற்க மறுத்தால், புதிதாக தேர்தெடுக்கப்படவுள்ள நாடாளுமன்றம் எந்த அளவுக்கு சட்டபூர்வ தன்மை கொண்டதாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில் தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே இருக்கும் நிலையில், அவர்களால் அதிபர் மீது எந்த வகையான கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் விதிக்க முடியும்... இருந்தாலும் கூட தற்போது உள்ள நிலையில் முஷாராஃபே ஆளச் சிறந்தவர் என அமெரிக்கா போன்ற நாடுகள் நினைக்கின்றன. அவர்களுக்கு தேவையான நெகிழ்வுத்தன்மைய அவர் அளிப்பார் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. இருந்த போதிலும் அவர்களது அழுத்தங்கள் தொடரவே செய்யும்.
எனினும் அரசியல் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் வெற்றியடைவார் என்றே தோன்றுகிறது.

No comments: