November 19, 2007

ஆசிய அளவிலான போட்டியில் புதுச்சேரி மாணவி மகேஸ்வரி சாதனை

அன்மையில் ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலனா இளைஞர்கள் மற்றும் ஜூனியர்களுக்கான எடை தூக்கும் போட்டியில் 15 வயதான புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மாணவி மகேஸ்வரி மூன்று தங்கப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய இளைஞர்களுக்கான போட்டியில் 58 கிலோ எடைப் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களும், ஆசிய ஜூனியகர்களுக்கான போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களும் மகேஸ்வரி வென்றுள்ளார். புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்திலுள்ள கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் ஆண்டு படித்து வரும் மகேஸ்வரிதான் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து உலக அளவில் பெண்களுக்கான எடை தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்றிருக்கும் முதல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விவசாயின் மகளான மகேஸ்வரி கல்வியிலும் சிறந்து விளங்குகிறார். தமது பத்தாம் ஆண்டுத் தேர்வில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளிப் படிப்பிலும் சிறந்து விளங்கும் மகேஸ்வரி ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது இலட்சியம் என்றும் அது குறித்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்

No comments: