December 08, 2007

இந்தியாவில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் கிடைக்குமா?

இந்தியாவின் கிடுகிடு பொருளாதார வளர்ச்சியும் பிரம்மாண்ட தொழில் வளர்ச்சியும் நாட்டின் நிலங்களை குறைவானவர்கள் கைகளில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது. நகரங்களில் வர்த்தகம் பெரும் முன்னேற்றம் கண்டுவருகிறது. வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் பிரம்மாண்ட நடுத்தர வர்க்கத்தில் தற்போது சுமார் 30 கோடிப் பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் மாபெரும் ஜனத்தொகையில் 8 சதவீதம் பேர் இன்றளவும் ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்ந்துவரும் அவலநிலை. ஏழைகள் பிழைப்புக்காக கிராமங்களை விட்டு வெளியேறி நகர்ப்புற சேரிகளில் தஞ்சம் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் நில உரிமை நிலை என்பது உலகில் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமுள்ள நியாயமற்ற, சமச்சீரற்ற நிலையில் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்று நிலமற்றவர்கள் விரும்புகிறார்கள்.

No comments: