January 29, 2008
ஒருவரின் 44 வயதில் மனச்சோர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், மனிதர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு குறித்த சமீபத்திய ஆய்வின் முடிவுகள். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சுமார் எண்பது நாடுகளில் 20 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், மனிதர்களில் பெரும் பாலானவர்களுக்கு, 40 வயதாகும் போது மனச்சோர்வு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 44 வயதில், இந்த மனச்சோர்வு மிக அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆண், பெண், ஏழை, பணக்காரன், திருமணம் ஆனவர், ஆகாதவர், குழந்தைகளை பெற்றவர், பெறாதவர் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி எல்லாதரப்பினரையும், அவர்கள் 40 வயதை கடந்த பிறகு, இந்த மனச்சோர்வு பாதிப்பதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் இப்படி மத்திய வயதாகும்போது மனச்சோர்வால்பாதிக்கப்படுவதற்கு பல காரணங்களையும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:31 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
January 02, 2008
திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவகங்கை செழியன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:53 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:46 PM
2
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : "பிபிசி" தமிழோசை
பாகிஸ்தான் தேர்தல்கள் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
பாகிஸ்தானில் இம்மாதம் எட்டாம் தேதி நடைபெற இருந்த பொதுத் தேர்தல்கள் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோ ராவல்பிண்டியில் ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேற இருந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு நாடெங்கும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளின் போது நாட்டில் பல வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் அனைத்துமே மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானின் தலைமை தேர்தல் அணையாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீகின் நவாஸ் பிரிவும் தேர்தல்கள் திட்டமிட்டபடி இம்மாதம் எட்டாம் தேதியே நடைபெற வேண்டும் என வலியுறித்து வந்தன. தேர்தல் பிரச்சாரத்தால் களைகட்டியிருக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த இரண்டு கட்சிகளும் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் அதிபர் முஷாரஃப் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சுமத்தின. நாட்டில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அனைத்துமுக்கிய எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது எண்ணப்படி நடக்க வேண்டுமென அரசு விரும்புவதாகவும், அதற்கேற்ற வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகவும், சுதந்திரத் தன்மையுடன் அது இயங்கவில்லை என்றும், அதனால் மக்கள் தேர்தல் ஆணையத்தை நம்புவதில்லை என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : 'பிபிசி' தமிழோசை
January 01, 2008
அகிலத்தின் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனதருமை தமிழ் உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:51 AM
0
comments (நெற்றிக்கண்)