March 31, 2008

"எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி" - கவிஞர் கனிமொழி

"எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி" என்று கவிஞர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.


தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 9 நாட்களுக்கு கலை இலக்கிய திருவிழா சென்னையில் தொடங்கியது. கவிஞர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கேற்றி இதைத் தொடங்கி வைத்தார். தி.நகர் வாணி மஹாலில் இந்த திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று, திராவிட இயக்கப் படைப்பாளிகளில் சிலர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்கிப் பேசினார். மேலும் முனைவர் வீ.அரசு, ஏ.எஸ்.பன்னீர் செல்வம், ந.முருகேச பாண்டியன், பேரா. சுப.வீரபாண்டியன் ஆகியோர் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கலை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- இன்று தொடங்கி 9 நாட்களாக நடைபெற உள்ள இந்தக் கலை இலக்கியத் திருவிழா வெறும் திராவிட இயக்கத்தின் சிறப்புக்களை மட்டும் பகிர்ந்துகொண்டு பாராட்டுவதற்கு அல்ல. தோழர் ஜீவா முதல் சிதம்பர தில்லையம்பல ஓதுவார் வரை இங்கே சிறப்பிக்கப்பட உள்ளனர்.

கனிமொழி
திராவிட எழுத்துக்கள் இலக்கியம் இல்லை என்று தொடர் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று இப்பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மேடை முதல் நாடு வரை பெண்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அது திராவிடம் தந்த வெற்றி. கல்வி, சமூக நீதி. சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை இவை எல்லாம் திராவிடத்தால் மட்டுமே நமக்கு சாத்தியமானவை. அதேபோல் இன்றைய சூழ்நிலையில் போராட்ட உணர்வு இங்கே தேவை இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டது; என்று ஒருவித போலி பிரசாரத்தை எல்லா ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? இன்னும் நம்முடைய போராட்டத்தின் தேவை என்ன என்பது நமக்குத் தெரியும். ராமர் பாலம் பிரச்சினை. அதற்கு மதச் சாயம் பூசப்படுகிறது. அதன் உருவகமாக தலைவர் கலைஞர் ஆக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் ஆக்கப் பூர்வமான வளர்ச்சியையும், உற்பத்தியையும் தடுக்கும் வகையில் ஒரு தரப்பு நடத்திவரும் சதி இது. ஒரு காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்த சென்னை ஒரு பெரிய நகரமாக ஆனதற்கு என்ன காரணம்? இங்கு உருவாக்கப்பட்ட துறைமுகம்தான் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் என சகல துறைகளிலும் தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திட்டம்தான் சேது பாலத் திட்டம். ஆனால் அதை ராமர் எனும் பெயரை வைத்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை இங்கே நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என நம்பும் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் மீண்டும் திராவிட இயக்க கருத்துக்களை நாம் மறு வாசிப்பு செய்ய வேண்டும். பாதை மறந்து விட்டால் நம் பயணத்தின் இலக்கு நமக்குத் தெரியாது. தொடர்ச்சியாக நாம் ஒதுக்கி வைக்கப்பப்டுவோம். தில்லையம்பலத் தீட்டுக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒரு தேவதாசிப் பெண் கட்டிய கோவிலான திருவையாறில் தமிழில் பாடக்கூடாது என்ற நிலை இருந்தது. அப்படிப் பாடினால அந்த இடத்தை தண்ணீர் வைத்துக் கழுவிவிட்டு தீட்டு கழித்த சம்பவம் இங்கே நடந்திருக்கிறது. அதை உடைத்துக் காட்டிய பெருமை திமுகவைத்தான் சாரும். இதனைக் கண்டித்து முரசொலியில் தலைவர் கலைஞர் எழுதிய 'தீட்டாயிடுத்து' என்ற தலையங்கம் பெரியார் அவர்களால் பாராட்டப் பெற்றது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=913&Itemid=164

1 comment:

Saravana said...

அத்வானி பிறந்தாளும் இவர் மோகன் பிறந்த நாளும் ஒரே நேரத்தில் வரும் அதுதான் அவருக்கு வந்த ஜய அம்மா ஏதோ ஒரு வியாதி பேர் சோன்னாங்களே அதுதான் ;)