July 29, 2007

இசையை ரசிக்கக் கூடிய ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத ஒரு வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம்தான். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை என்று சொல்லி நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கும் விதத்தில் மயங்காத தமிழ் நெஞ்சங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொலைக்காட்சி, சினிமாக்கள் இன்றைய அளவுக்குப் பிரபலமடையாத அந்தக்காலத்தில் ஒரே ஒரு பொழுது போக்குச் சாதனம் வானொலி ஒன்றுதான். இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டிருந்தால் நம்மையறியாமலே மனதில் ஒரு திருமண வீடு போன்ற குதூகலம் பிறக்கும். நெடுநாளைக்குப்பின் அந்த அனுபவத்தை இப்போதும் இந்த ஒலிப்பதிவைக் கேட்கும்போது உணரமுடிகிறது. அப்படிப்பட்ட அற்புதமான, இனிமையான மலரும் நினைவுகளை நம் செவிகளுக்கு விருந்தாக்கியிருக்கிறார் அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர். அந்த இனிமையான குரல்களில் இவருடைய குரலும் ஒன்று. இப்போது இலங்கை வானொலியில் இவருடைய குரலைக் கேட்க முடியாவிட்டாலும், நமது தமிழகத்தில் "சூரியன் பண்பலை" வரிசையில் இரவு நேரத் தொகுப்பாளராக மிக அருமையாகவும், அற்புதமாகவும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிவது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைக் கேட்போம். திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நன்றி

Powered by eSnips.com

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் இன்றும் ஏன் இப்போதும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பே கேட்கிறேன். இணையம் வழியே...
அது தனி இன்பமே!! இயன்றவரை சிறப்புற நடத்துகிறார்கள்.