August 20, 2007

தண்ணீரே வேண்டாம்! பெப்சி, கோகோ-கோலா போதும்!!

இன்று தண்ணீரே வேண்டாம். கோலா கோலா என்று அடம் பிடிக்கும் பிள்ளைகள், காலம் பூராவும் கோலாவையே குடித்து (அது பெப்சி கோலாவாக இருக்கட்டும் அல்லது கொக்கோ கோலாவாக இருக்கட்டும்) 100 வருடங்கள் சுகதேகியாக வாழ்வார்களா? 100 வயது வரை வேண்டாம். குறைந்த பட்சம் 80 வயது வரையாவது ஆரோக்கியமாக, கோலா கோலா என்று அலையும் நாளைய சமுதாயம் வாழுமா?

பெற்றோர்கள் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை, பிள்ளைகளுக்குச் சிறுவயதில் இருந்தே பழக்கினால், பல பாரதூரமான பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாமல்லவா? தண்ணீரின் அற்புதம் பற்றி இவர்கள் முழுமையாக அறிவது மிக அவசியம். பல உலக நாடுகளில், பல கோடி மக்கள் , நல்ல குடிநீர் இன்றி அவஸ்தைப்படுவதை இவர்கள் அறிவார்களா? சுத்தமான, நல்ல தண்ணீர் வசதி தாரளமாக இருக்க, இனிப்பும் வண்ணமும் சேர்த்து அதிக விலையில் விற்கும், மென்பானங்களை வாங்கி, நமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதை இனியாவது நிறுத்துவோமே.
ஐந்து இந்திய மாவட்டங்கள், பகுதியாகவும், ஒரு மாவட்டம் முழுமையாகவும், பெப்சி, கோகோகோலா என்ற இரு நிறுவனங்களின் மென்பானங்களின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளமை, பரபரப்பான செய்தித் தலைப்பாகி இருந்தது. கடைகளில் விற்பனையாகும் இந்த மென் பானங்களில் கிருமி நாசினிகளின் கலவை இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், இது உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதே இவர்கள் குற்றச்சாட்டாக இருக்கின்றது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க...

No comments: