August 20, 2007

ஆமடா சின்னத் தம்பி! திரு.ரமணன்

இசைக் கவி ரமணனின் இன்னொரு பாடல் இங்கே. நாட்டு நடப்புகளை, உள் மனத்தின் ஆற்றாமைகளை, ஏக்கங்களை, நம்முடன் கவிஞர் பகிர்ந்துகொள்கிறார்; வருத்தம் தோய்ந்த இந்த வரிகள், உங்கள் செவியோரம் இதோ வலம் வருகின்றன....... இந்த இணைப்பில் சென்று பாடலைக் கேளுங்கள்
http://tamil.sify.com/columns//fullstory.php?id=14451388

இந்தப் பாடலைப் பாடியவர்கள்: கவிஞர் ரமணன், சர்ஜனா.முதலில் பாடலைக் கேளுங்கள்: நேர அளவு: 4.42 நிமிடங்கள்உங்கள் கணினியில் இசை கேட்கும் அமைப்பு இல்லாதவர்களின் வசதிக்காக அந்தப் பாடலை எழுத்திலும் தருகிறோம்:


ஆமடா சின்னத்தம்பி!

ஆமடா சின்னத்தம்பி

அறிவுரொம்ப வளந்திருச்சி

அன்புமட்டும் மனசெவிட்டுக் குருவிபோலப் பறந்திருச்சி!

சாஞ்சி காலெ நீட்டுறாப்புலெ ஆயுளெயும் நீட்டிக்கலாம்

சட்டெதுணி மாத்துறாப்புலெ காலுகையெ மாத்திக்கலாம்

நட்டநடு வானத்துலெ நாடகம் நடத்திக்கலாம்

நாலு எண்ணி முடிக்குமுன்னெ நம்மவூரு போயிவரலாம்

ஆனாக்க நமக்குமட்டும் ஆழாக்கு அரிசியில்லெ

மானமில்லெ மதிப்புமில்லெ மண்ணுலே உரிமெயில்லே

மண்ணுல உரிமெயில்லே மானத்துல மாளிகெயாம்! (ஆமடா)


தப்பாமெ கணக்குப்போடும் பொல்லாத பூதங்களாம்

பத்தாளு வேலெகளெப் பாத்துக்குற ராச்சசனாம்

அப்பன் ஆயி வேணாமாம் செப்புக்குள்ளெ கொழந்தெகளாம்

ஆத்தாடி கல்லுகளுக்கும் நம்மப்போலெ உசிரிருக்காம்!

ஒழெக்கிற சாதிக்கும் உசிரு இருக்குதின்னு

பொழெக்கிற சாதிக்குப் புரியாமெ போகுறதென்ன?

குள்ளநரி அறிவாலே கோழிக்கு லாபமென்ன?

மண்ணுல போதாமத்தான் மானத்தெச் சொரண்டுறாய்ங்க

மானத்துக்கும் நம்மளெத்தான் மாரடிக்கக் கூப்பிடுவாய்ங்க.

No comments: