August 31, 2007

பஹ்ரைன் நாட்டில் பணிபுரியும் இந்திய நண்பர்களே எச்சரிக்கை!

கறுப்பு பட்டியலில் 45 பஹ்ரைன் கம்பெனிகள் : ஊழியர்களை மோசமாக நடத்துவது, ஊதியம் வழங்காமை போன்ற மோசடியில் ஈடுபடும் 45 பஹ்ரைன் நிறுவனங்களை இந்திய தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. பஹ்ரைனில் உள்ள பல கட்டுமான கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் பல நிறுவனங்கள் உள்ளூர் சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காமலும், அவர்களுக்கு மோசமான நிலையில் உள்ள தங்குமிடங்களை அளித்தும் அவர்களை மோசமாக நடத்துவதாக கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்திய தூதரகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் 45 பஹ்ரைன் கம்பெனிகளை இந்திய தூதரகம் அடையாளம் கண்டு அவற்றை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது தவறுகளை சரி செய்யாதவரை, அந்நிறுவனங்கள் இந்தியப் பணியாளர்களை வேலையில் அமர்த்துவதற்கான அனுமதியை இந்தியத் தூதரகம் அளிக்காது என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ண ஷெட்டி தெரிவித்தார். மேலும் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள 45 பஹ்ரைன் நிறுவனங்களின் உரிமையாளர்களோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளோ இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
துபாய்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 30 ஆகஸ்டு 2007 ( 15:07 IST )
(மூலம் - வெப்துனியா)

No comments: