September 05, 2007

உங்களிடம் நோக்கியா மொபைல் இருந்தால் உடனே பேட்டரியை பார்க்கவும்

மும்பை : புகழ்பெற்ற மொபைல் கம்பெனியான நோக்கியா, உலகம் முழுவதிலும் உள்ள அதன் உபயோகிப் பாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நோக்கியா மொபைலில் பிஎல் 5 சி என்ற பேட்டரி பொருத்தப்பட்டிருந்தால் உடனே அதை மாற்ற சொல்கிறது. அந்த குறிப்பிட்ட நம்பர் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது சார்ட் சக்க்யூட் ஆகி, பேட்டரி சூடாகி விடுகிறதாம். உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான புகார்கள் நோக்கியா நிறுவனத்திற்கு வந்ததால் அந்த குறிப்பிட்ட வகை பேட்டரியை இலவசமாக மாற்றித்தர நோக்கியா நிறுவனம் முன்வந்துள்ளது. இவ்வாறு பேட்டரி சூடானதால் இதுவரை யாருக்கும் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டதாக புகார் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக இந்த வகை பேட்டரிகளை மாற்றித்தர அந் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த பிஎல் 5 சி வகை பேட்டரிகள் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம் தயாரித்து நோக்கியாவுக்கு சப்ளை செய்யதாம். நோக்கியா, அதன் மொபைல் போன்களுக்கு தேவையான பேட்டரிகளை பல கம்பெனிகளிடமிருந்து பெற்றிருக்கிறது. அவர்கள் எல்லோருமாக சேர்ந்து 30 கோடிக்கும் அதிகமான பிஎல் 5 சி பேட்டரிகளை சப்ளை செய்திருக்கிறார்கள். அதில் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம், டிசம்பர் 2005 இலிருந்து நவம்பர் 2006 வரை தயாரித்து வழங்கிய 4 கோடியே 60 லட்சம் பிஎல் 5 சி பேட்டரிகளில் தான் இந்த புகார்கள் வந்துள்ளன. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகளை மட்டும் மாற்றினால் போதும். இதை தவிற வேறு வகை பேட்டரிகளை மாற்ற தேவை இல்லை. நம்மிடம் நோக்கியா மொபைல் இருந்து, அதிலிருக்கும் பேட்டரியும் பிஎல் 5 சி தான் என்றால், அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்று, நோக்கியா.காம் வெப்சைட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம். www.nokia.com

No comments: